வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாரியளவு காப்புறுதித் தொகை ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து வீடுகளுக்கேச் சென்று குறித்த கும்பல் பணத்தை கொள்ளையிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றி நாடு திரும்பும் இலங்கையர்கள் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Popularity: 2% [?]






