09, 10 வயது சிறுமிகளை நிர்வாண படமெடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடூரன் கைது

09 மற்றும் 10 வயது சிறுமிகள் இருவரை நிர்வாணமாக்கி கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்து அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஒழுக்கக் கேடான சம்பவம் பிலியந்தலை – தொம்பே – பொல்கொடகங்கே நீராடும் இடத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிகள் இருவரும் வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து ஆபாச வீடியோக்களும் சிறுமிகளை நிர்வாணமாக்கி எடுத்த வீடியோக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று (19) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts:

Pin It